×

3 ஆயிரம் கோழி குஞ்சுகள் எரிந்து நாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நேற்றிரவு ஒரு தனியார் கோழி பண்ணையில் இடி தாக்கியதில், மின்விளக்குகள் வெடித்து தீப்பிடித்ததில் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் எரிந்து கருகி நாசமாகிவிட்டன. காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம், முத்துவேடு கிராமப் பகுதியில் ஒரு தனியார் கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அவை முட்டை மற்றும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று நள்ளிரவு காஞ்சிபுரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதில் தனியார் கோழிப் பண்ணைமீது இடி தாக்கியதில், அதன் மேற்கூரைகளில் இருந்த மின்விளக்குகள் வெடித்து தீப்பிடித்து எரியத் துவங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் எரிந்து கருகி நாசமாகிவிட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post 3 ஆயிரம் கோழி குஞ்சுகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...